இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்பு நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களை குவித்துள்ளது.
அதன் பின்னர் தற்போது 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியானது விளையாடி வருகிறது. இந்நிலையில் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் விளையாடிய வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியை மையமாக வைத்து ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் டி20 உலக கோப்பை தொடரை வென்ற பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் தற்போது இந்திய அணிக்காக மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாட திரும்பி இருக்கிறார்கள். இம்முறை கம்பீருடன் இணைந்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விளையாடி வருவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது விராட் கோலி குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. அது யாதெனில் : தற்போது தனது 293-வது ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 280 இன்னிங்ஸ்களில் விளையாடி 44 முறை ஆட்டமிழக்காமல் இருந்து 13 ஆயிரத்து 848 ரன்களை குவித்துள்ளார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 183 ரன்களையும், 50 சதங்கள் மற்றும் 72 அரைசதங்களையும் விராட் கோலி அடித்துள்ளார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 13 ஆயிரத்து 848 ரன்கள் அடித்துள்ள வேளையில் தற்போது இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள 16 வீரர்களும் சேர்ந்து ஒட்டுமொத்தமாகவே 12885 ரன்கள் தான் குவித்துள்ளார்கள்.
இதையும் படிங்க : முதல் இலங்கை ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்தது ஏன்? பிசிசிஐ சோகமான அறிவிப்பு
அப்படி பார்க்கையில் இலங்கை அணியின் 16 வீரர்களை தாண்டி ஒரே ஆளாக விராட் கோலி அவர்களை அதிக ரன்கள் குவித்து முன்னிலையில் உள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.