இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்களை குவித்தது.
அடுத்ததாக விளையாடிய இலங்கை அணியானது 22 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 73 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணியானது 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்த தொடரையும் மூன்றுக்கும் பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பான துவக்கத்தை கண்ட வேளையில் துவக்க வீரரான சுப்மன் கில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சாதத்தை அடித்து அசத்தினார்.
அவருடன் உறுதிணையாக இருந்த விராட் கோலி இறுதிவரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டம் இழக்காமல் 110 பந்துகளில் 166 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் அவர் ஆட்டநாயகன் விருதினை வென்றதுடன் தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தினார், இந்நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி தற்போது மேலும் ஒரு புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
அதன்படி ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தகர்த்துவரும் விராட் கோலி தற்போது சச்சினின் மேலும் மற்றொரு சாதனையை முறியடித்துள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது. அந்த வகையில் விராட் கோலி இன்று அடித்த சதத்தோடு சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 46-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
அதே வேளையில் சொந்த மண்ணில் அதாவது இந்தியா மண்ணில் அவர் அடித்த 21-வது சதமாகவும் இது அமைந்துள்ளது. ஏற்கனவே சச்சின் 160 – இன்னிங்ஸ்களில் விளையாடி இந்திய மண்ணில் 20 சதம் அடித்திருந்த வேளையில் தற்போது கோலி தனது நூறாவது இன்னிங்ஸில் இந்திய மண்ணில் 21-வது சதத்தை அடித்து அந்த சாதனையை தகர்த்துள்ளார்.
இதையும் படிங்க : IND vs SL : இலங்கையை வெறும் 73 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா – ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய இரட்டை உலக சாதனை
அதுமட்டும் இன்றி வெகு விரைவில் அவர் சச்சினில் 49 சதங்கள் சாதனையை முறியடித்து இன்னும் மேற்கொண்டு பல சாதனைகளை அவர் செய்வார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.