இன்றைய போட்டியில் இஷாந்த் நீக்கப்பட்டதற்கு இதுவே காரணம் – கோலி பேட்டி

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சி மைதானத்தில் இன்னும் சிறிது நேரத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி தோல்வி தொடரை பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Ishanth-2

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணி டாஸில் வெற்றிபெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டாஸ் முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட் செய்ய விரும்புகிறோம். ஏனெனில் இந்த மைதானம் முதலில் ஸ்லோவாக இருந்தாலும் பிறகு நன்றாக பேட்டிங்கை ஒத்துழைக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

மேலும் இந்த போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா விளையாடமாட்டார் அவருக்கு பதிலாக உள்ளூர் வீரரான சபாஷ் நதீம் அறிமுகப் போட்டியில் விளையாட இருக்கிறார். இஷாந்த் சர்மாவுக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை அவருக்கு தற்போது ஓய்வு தேவை என்பதால் அவருக்கு இந்த போட்டியில் ஓய்வு அளித்துள்ளோம்.

Ishanth-1

அவருக்கு பதிலாக உள்ளூர் வீரரான சபாஷ் நதீமுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். அவருக்கு நிச்சயம் இது ஒரு கனவு போட்டியாக இருக்கும் என்றும், தொடர்ச்சியாக அவர் சிறப்பாக விளையாடிவருகிறார் அதனாலே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரை அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement