அனுஷ்கா மட்டும் இல்லனா என் வாழ்க்கையில இது நடந்தே இருக்காது – கோலி ஓபன் டாக்

anushka
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியான அனுஷ்கா சர்மாவிடம் என்று பல சில முக்கியமான விஷயங்களை கற்று உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவருக்கும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த 2013ம் ஆண்டு இருந்து காதல் இருந்து வந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

viratanushka

- Advertisement -

திருமணம் ஆகும் முன்னரே கோலியுடன் உள்நாட்டு தொடர்களில் மைதானத்தில் அனுஷ்காவை காணமுடியும்.தற்போது திருமணமான இரண்டு ஆண்டுகளாகவே வெளிநாட்டு தொடர்களிலும் இந்திய அணியுடன் பயணிக்கிறார். மேலும் எங்கு சென்றாலும் கோலியுடன் புகைப்படம் எடுத்து பதிவிடும் அனுஷ்கா தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிற்குள்லே கோலியை கிண்டல் செய்து ஒரு வீடியோ ஒன்றினையும் பதிவிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நேரத்தில் வீட்டிற்குள்ளேயே விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா முடங்கியுள்ளனர். இருவரும் இந்த நேரத்தை இருவரும் ஜாலியாக செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவிடம் இருந்து தான் பல விஷயங்களை கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார் விராட் கோலி. இதுகுறித்து அவர் கூறுகையில்…

Anushka

நான் அனுஷ்கா சர்மாவை சந்திக்கும் முன்னர் நான் பொறுமை இல்லாதவனாகவும் அதிகம் கோபம் கொண்டவனாகவும் இருந்தேன். அவரை சந்தித்த பின்னர் எவ்வாறு பொறுமையாக இருப்பது என்று கற்றுக்கொண்டேன். அவரின் குணம் எனக்கு மிகவும் பிடித்தது. கடினமான சூழ்நிலையிலும் போராடி வெற்றி கொள்ளும் ஒரு பண்பினை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று கூறியுள்ளார் விராட் கோலி.

- Advertisement -

களத்தில் பொதுவாக ஆக்ரோஷ பாணியை கடைபிடித்துவரும் கேப்டன் கோலி திமிர் பிடித்த வீரர் என்று கருதப்படுகிறார். ஆனால் மைதானத்திற்கு வெளியே கோலி ரசிகர்களுடன் பழகும் விதமே வேறு அதனை நாம் கண்கூடாக பார்த்துள்ளோம். மைதானத்தில் கோபமாக இருக்கும் கோலி ரசிகர்களை சந்திக்கும்போது அவர்களுக்கு புகைப்படமோ அல்லது கையெழுத்தோ இடாமல் செல்வது கிடையாது.

anushka

அந்த அளவிற்கு கோலி அன்பாக பழகி வருகிறார். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்று கூறுவார்கள் அந்தவகையில் களத்தில் ஆக்ரோஷமாக காணப்படும் கோலி ஆட்டம் முடிந்தவுடன் முற்றிலும் மாறி இயல்பாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இந்த பொறுமை எனக்கு அனுஷ்காவிடம் இருந்தே வந்தது என்றே கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement