இவர் உலகத்தரம் வாய்ந்த பவுலர். முதல் 5-6 ஓவர்களில் அற்புதத்தை நிகழ்த்துகிறார் – விராட் கோலி பெருமிதம்

kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் வெற்றிகரமாக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கோப்பைகள் என அனைத்து கோப்பைகளையும் இந்திய அணி கைப்பற்றியது.

Bumrah-1

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் பேட்டியளித்த விராட் கோலி கூறியதாவது : பும்ரா உலகத்தரம் வாய்ந்த பவுலர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். மேலும் அவர் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த எப்போதும் விரும்புகிறார்.

- Advertisement -

முதல் 5-6 ஓவர்களில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புகிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமே இல்லை. டி20 தொடரில் மட்டும் சிறப்பான பந்துவீச்சை அளிக்காமல் அவர் பங்கேற்கும் அனைத்து வடிவங்களிலும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைக்கிறார். எனவே அவரின் இந்த சிறப்பான பந்துவீச்சு இனிமேலும் தொடரும்.

Bumrah

இந்தத் தொடரில் அவர் பந்து வீசிய விதம், வேகம் மற்றும் ஸ்விங் ஆகிய அனைத்தும் சிறப்பாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை தற்போதைய முழுமையான பந்து வீச்சாளர் என்றால் உலக அளவில் நான் பும்ராவையே கூறுவேன். ஒரு பந்து வீச்சாளராக 2018 ஆம் ஆண்டு தனது டெஸ்ட் வாழ்க்கையை துவங்கியவர் இவ்வளவு விரைவில் முன்னணி பந்துவீச்சாளராக உயர்ந்துள்ளது எனக்கு பெருமை அளிக்கிறது என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement