நேற்றைய நெகிழ்ச்சியான செயல் மூலம் பாராட்டுகளை குவித்து கொண்டிருக்கும் கோலி – விவரம் இதோ

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய அடுத்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது.

Umesh

- Advertisement -

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியும், ஜடேஜாவும் தங்களது அசாத்தியமான பேட்டிங் மூலம் இந்திய அணியை சிறப்பான நிலைக்குக் கொண்டு சென்றனர். மேலும் ஜடேஜா சதம் அடிக்கும் வரை காத்திருந்த கோலி இடையில் ஜடேஜா 91 ரன்களில் ஆட்டமிழந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார்.

ஜடேஜா ஆட்டம் இழக்கும்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் நினைத்திருந்தால் நேற்றைய போட்டியில் 300 ரன்கள் அடிக்கும்வரை சிறிதுநேரம் போட்டியை எடுத்து சென்றிருக்கலாம். ஆனால் தனது முச்சத சாதனையை தள்ளிவைத்து இந்திய அணிக்கு எது நல்லது என்று தீர்மானித்து டிக்ளேர் செய்தார்.

Jadeja-1

மேலும் அவர் நினைத்ததுபோல் நேற்று இறுதியாக 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இந்திய அணி வீழ்த்தியது. கோலியின் இந்த சுயநலமற்ற முடிவை இந்திய அணி ரசிகர்கள் பலரும் வரவேற்று தங்களது வாழ்த்துக்களை இணையதளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது கோலி பாராட்டு மழையில் நனைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement