ஹர்டிக் பாண்டியா நேற்றைய போட்டியில் பந்துவீச இதுவே காரணம் – விராட் கோலி வெளிப்படை

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டி சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.

indvsaus

- Advertisement -

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

pandya

இந்நிலையில் முதுகு பகுதியில் செய்து கொண்ட ஆபரேஷன் காரணமாக கடந்த 1 ஆண்டிற்கும் மேலாக பந்துவீசாமல் இருந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா நேற்றைய போட்டியில் பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசிய பாண்டியா 24 ரன்களை விட்டுக்கொடுத்து முக்கிய விக்கெட்டாக சதமடித்த ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை கைப்பற்றினார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஏன் பாண்டியா பந்துவீசினார் என்ற காரணத்தை கேப்டன் கோலி வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

pandya 1

இந்த போட்டியில் பாண்டியா முதலில் பந்துவீச முடியும் என்று உறுதியாக நம்பினார். அதனால் முதலில் 2 ஓவர்கள் பந்துவீச முன்வந்தார். அதன்பின்னர் மீண்டும் அவர் பந்துவீச சவுகரியமாக இருந்ததால் மற்றொரு 2 ஓவர்கள் வீசினார். ஏற்கனவே பாண்டியா தான் பந்துவீச 100% தயாராக இருக்கும்போது பந்துவீசுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement