Virat Kohli : பண்ட்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் தேர்வானதன் உண்மை இதுதான் – விராட் கோலி

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரு

virat4
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

Worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று முடிந்தது. இன்னும் சில நாட்களில் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்நிலையில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் தேர்வு ஆனது குறித்தும், ரிஷப் பண்ட் தேர்வு ஆகாதது குறித்தும் கோலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : பண்ட் திறமையான வீரர் தான் ஆனால் அவருக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கிறது. தினேஷ் கார்த்திக் அவரைவிட பல வருடம் அனுபவம் வாய்ந்த வீரர் அதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். பண்ட் இளம்வீரர் மேலும் இன்னும் அவருக்கு அனுபவம் வர போட்டிகள் தேவை. அதற்கான வாய்ப்பு உலகக்கோப்பை தொடர் முடிந்து அவருக்கு அளிக்கப்படும்.

Karthik

ஒருவேளை தோனிக்கு காயமோ அல்லது விளையாட முடியாத சூழ்நிலையும் ஏற்படுமாயின் அப்போது தோனிக்கு சிறந்த மாற்றாக தினேஷ் கார்த்திக் விளங்குவார். மேலும், விக்கெட்டுகள் தொடர்ந்து சரியும் போது அவரால் பின்வரிசையில் நின்று சிறப்பாக ஆட முடியும். அதனை பலமுறை அவர் நிரூபித்திருக்கிறார் இதனாலே அவருக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது என்று கூறினார்.

Advertisement