டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு : முக்கிய வீரரை கழற்றி விட்ட கோலி – ரசிகர்கள் அதிருப்தி

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று நாட்டிங்காம் நகரில் இன்னும் சில நிமிடங்களில் துவங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு போடப்பட்ட டாஸ் நிகழ்வின்போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ரூட் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது இங்கிலாந்து பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

INDvsENG

இந்நிலையில் டாஸ் நிகழ்வு முடிந்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் குறித்து பேசிய கேப்டன் கோலி கூறுகையில் : கில், அகர்வால் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக ராகுல் களம் இறங்குவார் என்று உறுதிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சாளர்களாக :

- Advertisement -

பும்ரா, ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் விளையாடுவார்கள் என்றும் சுழற்பந்து வீச்சாளராக ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் என்று அறிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் ரவிச்சந்திரன் அஷ்வினை அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இவரின் இந்த தேர்வு தற்போது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Ashwin

ஏனெனில் கடைசியாக நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அசத்தலாக பந்துவீசிய அஸ்வினை இந்த போட்டியில் இருந்து வெளியேற்றியது தவறான முடிவு என்று தற்போது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஜடேஜா பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்படுவார் என்ற காரணத்தினாலேயே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தெரிகிறது.

- Advertisement -

jadeja 2

இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ரஹானே, 6) ரிஷப் பண்ட், 7) ஜடேஜா, 8) பும்ரா, 9) ஷமி, 10) ஷர்துல் தாகூர், 11) முகமது சிராஜ்

Advertisement