குல்தீப் யாதவின் சாதனையை தடுக்க சதி செய்த விராட் கோலி – என்னங்க இப்படி பண்ணிட்டீங்க

Kuldeep
- Advertisement -

இந்தியா தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது ஒருநாள் போட்டியில் இன்று சற்றுநேரத்திற்கு முன் துவங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

bhuvi

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து அதன்படி தற்போது அந்த அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் ஆன குல்திப் யாதவ் இந்த போட்டியில் களமிறங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் என்ற சாதனை படைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவரை இந்த போட்டியில் தேர்வு செய்யாமல் அவருக்கு பதிலாக சாகலை தேர்வு செய்துள்ளார். எனவே குல்தீப் யாதவ் இந்த போட்டியில் விளையாடவில்லை கோலியின் இந்த தேர்வு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

chahal

ஏனெனில் இந்த போட்டியில் குல்தீப் விளையாடினால் அவர் சாதனை படைக்க வாய்ப்பு இருந்தும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் சாகலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் கோலி. எனவே குல்தீப் யாதவ் இந்த சாதனையைப் படைக்க இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் அதனால் குல்தீப் யாதவ்வை ஏன் இந்த போட்டியில் சேர்க்கவில்லை என்ற கேள்வியை இப்போதே தொடுக்க ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement