“ஆர்.சி.பி ஆர்.சி.பி” என மைதானத்தை தெறிக்கவிட்ட ரசிகர்கள். கோலி கொடுத்த ரியாக்ஷனை பார்த்தீங்களா ? – வைரலாகும் புகைப்படம்

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 286 ரன்களை குவித்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Ind-vs-aus-1

- Advertisement -

அதன்பிறகு 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோஹித் 119 ரன்களையும், கோலி 89 ரன்களையும் குவித்தனர். ஆட்டநாயகனாக ரோஹித்தும் தொடர் நாயகனாக கோலியும் அறிவிக்கப்பட்டனர். இந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கோலியின் பெங்களூரு அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் “ஆர்.சி.பி ஆர்.சி.பி” என்று கத்தினார்கள். போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றதால் ரசிகர்களின் ஆதரவு கோலிக்கும், பெங்களூரு அணிக்கும் இருந்தது.

kohli

ஆனால் அதை கவனித்த கோலி இது ஐ.பி.எல் போட்டி கிடையாது என்றும் இது சர்வதேச போட்டி என்பதால் இந்தியா அணிக்காக ஆதரவு தருமாறும், “இந்தியா இந்தியா” என்று கோஷமிடவும் ரசிகர்களை நோக்கி சைகையின் மூலம் கேட்டுக்கொண்டார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement