நான் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட இதுவே காரணம் – உண்மையை உடைத்த கோலி

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

Kohli 1

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். மேலும் இந்த போட்டி முடிந்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் வெற்றி குறித்து அவர் கூறியதாவது : அணிக்காக சிறப்பாக விளையாடுவது எப்பொழுதுமே ஒரு நல்ல உணர்வைத் தரும். மேலும் இந்த மைதானம் பேட்டிங் செய்ய அற்புதமாக இருந்தது.

- Advertisement -

நான் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுகிறேன் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால், நான் அதைபற்றி நினைப்பது கிடையாது. என் சீருடையின் முன் பக்கத்தில் இருக்கும் இந்தியா என்ற வார்த்தை தான் என்னை சிறப்பாக விளையாட வைக்கிறது. இந்திய அணிக்காக நான் விளையாடுவதில் பெருமையாக நினைக்கிறேன். எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி எந்த நாட்டில் இருந்தாலும் சரி நான் இந்திய அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

kohli

மேலும் அதற்கான வழியை பின்பற்றி நான் விளையாடுகிறேன். இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடுவதால் என்னால் தொடர்ந்து சிறப்பாக விளையாடமுடிகிறது. மேலும் அது ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டி என எதையும் நான் பார்ப்பதில்லை அணிக்காகவும், நாட்டுக்காகவும் வெற்றியை சேர்க்கவே நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறேன் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement