நாளைய போட்டியிலும் அஸ்வின் விளையாடுவது சந்தேகம். அஸ்வினுக்கு வாய்ப்பு தர மறுக்கும் கோலி – காரணம் இதுதான்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை ஜமைக்காவில் துவங்க உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Bumrah-1

- Advertisement -

இந்நிலையில் நாளை ஜமைக்காவில் நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற மாட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் காரணம் தற்போது தெரியவந்துள்ளது. முதல் போட்டியிலே அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது சர்ச்சையை விடயமாக மாறியது.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். மேலும் ஜடேஜா தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி பவுலிங் மற்றும் பேட்டிங்கில் ஜொலித்தார். எனவே நாளைய போட்டியிலும் அதே இந்திய அணியை களமிறக்க கோலி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ashwin 2

மேலும் கோலி அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்க மறுப்பதற்காகவே முதல் போட்டியில் விளையாடிய அதே வீரர்களை இரண்டாவது போட்டியிலும் தொடர வைப்பார் என்றும் தெரியவந்துள்ளது. இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருவதால் அவர்கள் இடத்தை அவர்கள் தக்க வைப்பார்கள் என்று தெரிகிறது. இதனால் இரண்டாவது டெஸ்டில் அஸ்வின் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்தது என்று கூறலாம்.

Advertisement