சச்சின், தோனியை தாண்டி மிகப்பெரிய கோலி ரசிகரின் வெறித்தனம் – ரசிகரின் செயலை பாருங்க

Kohli-Fan
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரர்களான சச்சின் தோனி போன்றவர்களுக்கு அவரது ரசிகர்கள் அவர்களின் பெயரை எழுதி மைதானத்தில் வித்தியாசமான உடை அணிந்து உடம்பு முழுவதும் வண்ணம் பூசி அவர்களை உற்சாகப்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களைத் தாண்டி கோலிக்கு ஒரு ரசிகர் கிடைத்துள்ளார்.

- Advertisement -

அவரின் பெயர் பின்டோ பெஹ்ரா ஒடிசா பகுதியைச் சேர்ந்த இவர் கோலியின் தீவிர ரசிகர் ஆவார். கோலியின் உருவத்தை தன் உடலில் பலபகுதிகளில் பச்சை குத்திக்கொண்டு மைதானத்தை வலம்வருகிறார் அந்த ரசிகர். இந்நிலையில் தன்னுடைய உருவத்தை பச்சையாக குத்திக்கொண்ட பிண்டோவை விராட் கோலி தற்போது சந்தித்துள்ளார்.

பின்டோ 2016-ஆம் ஆண்டு தன்னுடைய உடலில் முதல் பச்சை குத்தினார் விராட் கோலியின் உருவம் தான் அந்த முதல் பச்சை. மேலும் விராட் கோலி எனக்கு கடவுள் மாதிரி என்று கூறியவர் விராட் கோலியின் முகத்தை நெஞ்சிலும் அவரின் ஜெர்சி எண் 18 முதுகிலும் பச்சை குத்தியுள்ளார். மேலும் விராட் கோலி அடிக்கப்போகும் நூறாவது சதத்தை பச்சை குத்த உள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement