கோலியின் இந்த முடிவை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க. ஷாக்கிங் ட்விஸ்ட் கொடுத்த கோலி – மாஸ்டர் பிளான் தான்

Kohli-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி இன்று தற்போது துவங்கியுள்ளது.

Rohith-2

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் கோலி இந்திய அணியில் மூன்று முக்கிய மாற்றங்களை அறிவித்தார்.

கோலி கடந்த போட்டியின் போதே சைனி மற்றும் சுந்தர் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று கூறி இருந்ததால் இன்றைய போட்டியில் ஷர்துல் தாக்கூர் மற்றும் ஷிவம் துபே ஆகியவர்கள் நீக்கப்படுவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கோலி வித்தியாசமான முடிவை எடுத்து அவர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர்களுக்கான வாய்ப்பு வழங்கியுள்ளார். மேலும் இந்திய அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி கொண்டு வரும் மூத்த வீரர்களான ரோஹித், ஜடேஜா மற்றும் ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளித்துள்ளார்.

கோலியின் இந்த முடிவை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நிச்சயம் சரியாக பந்துவீசாத ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் தாகூருக்கு பதிலாக சைனியும், ஆல்ரவுண்டர் என்ற பெயரில் சாதாரணமாக விளையாடிக்கொண்டிருக்கும் துபேவுக்கு பதிலாக சுந்தரும் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கும் ஒரு வாய்ப்பினை வழங்கி மூன்று மூத்த வீரர்களை அணியில் இருந்து ஓய்வு கொடுத்த கோலியின் இந்த முடிவு நல்ல திட்டம் என்றே கூறலாம்.

Advertisement