ரோஹித் மற்றும் ரஹானே ஆகியோரை தேர்வு செய்வதில் தடுமாறும் கோலி – காரணம் இதுதான்

Kohli-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் வரும் 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

Rahane

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் அல்லது ரஹானே ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்வதில் குழப்பத்தில் உள்ளார். ஏனெனில் ரோஹித் கடந்த சில ஆண்டுகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், டெஸ்ட் போட்டிகளில் சற்று சொதப்பி வருகிறார் என்றே கூறலாம்.

- Advertisement -

ரஹானேவை பொறுத்தவரை ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வருகிறார். இருப்பினும் வெளிநாட்டு தொடர்களில் ரஹானே சிறப்பாக செயல்படுவார் என்ற புள்ளிவிவரமும் உள்ளது.

Rohith-1

இதன்காரணமாக 5 ஆவது இடத்தில் ரோஹித்தா ? அல்லது ரஹானேவா ? யாரை களமிறக்கலாம் என்று தற்போது கோலி குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது. நாளை மறுதினம் டாஸ் போடும்போது தான் முடிவு தெரியும்.

Advertisement