IND vs ENG : விஜய் ஷங்கர் நோ. கார்த்திக் ? பண்ட் ? குழப்பத்தில் – கோலி

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரை

Kohli
- Advertisement -

உலக கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இரண்டாவது வழியாக இந்தியா விரைவில் அரையிறுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pant

இந்நிலையில் அடுத்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது வீரராக யாரை ஆட வைப்பது என்ற குழப்பத்தில் கோலி உள்ளதாக தெரிகிறது. ஏனெனில் விஜய் ஷங்கர் தற்போது நான்காவது வீரராக இந்திய அணியில் ஆடி வருகிறார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைத்த மூன்று கோட்டை விட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் அவர் பேட்டிங்கில் தடுமாற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் இந்திய அணி 4-வது வீரராக இளம் வீரரான பண்ட்டை தேர்வு செய்ய அனைவரும் வற்புறுத்துகின்றனர். ஏனெனில் தவானுக்கு பிறகு இடது கை ஆட்டக்காரராக இந்திய அணியில் இருப்பது பண்ட் மட்டுமே இதனால் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இங்கிலாந்தில் ஏற்கனவே ஆடியுள்ளார் அவரது அதிரடி இந்தியா கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது.

Karthik

அதுமட்டுமின்றி அனுபவ வீரரான கார்த்திக் பல போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி உள்ளார். அவரது நிதானம் மிடில் ஓவர்களில் உதவும் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் அணியின் சூழ்நிலைக்கேற்ப பேட்டிங் செய்வார் என்பதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பண்ட் அல்லது கார்த்திக் இருவரில் யார் இடம்பெறுவார் ? என்ற குழப்பத்தில் கோலி உள்ளார் என்று தெரிகிறது.

Advertisement