வீடியோ : மைதானத்திலேயே ரிஷப் பண்ட் செய்த செயலால் கடுப்பான விராட் கோலி – நடந்தது என்ன?

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 287 ரன்கள் குவித்த அடுத்ததாக விளையாடிய இந்திய அணியானது பரபரப்பான சென்ற இந்த ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாகரின் சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றியின் விளிம்பு வரை சென்ற இந்திய அணியானது நூலிழையில் இந்த வெற்றியை தவற விட்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

pant4

- Advertisement -

இந்த தென் ஆப்ரிக்க தொடரில் ரிஷப் பண்ட் ஒரு சில போட்டிகளில் சிறப்பாக விளையாடியும், ஒரு சில போட்டியில் மோசமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி ஏமாற்றத்தையும் தந்துள்ளார். அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த அவர் இந்த ஒருநாள் தொடரிலும் 2 போட்டியின்போது 85 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் அவ்வப்போது ஒரு போட்டியில் அவர் மோசமாக விளையாடுவது வழக்கமாகி வருகிறது.

அந்த வகையில் நேற்றைய மூன்றாவது போட்டியிலும் முக்கியமான நேரத்தில் பண்ட் ஆட்டமிழந்தது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தவான் ஆட்டமிழந்து வெளியேறியதும் பொறுப்புடன் விராட் கோலியுடன் சேர்ந்து போட்டியை நகர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் பந்திலேயே தேவையில்லாத ஒரு ஷாட்டை தூக்கி அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதேபோன்று இவர் மோசமான ஷாட் விளையாடுவது முதல் முறை கிடையாது பலமுறை இவரது தவறான ஷாட் செலக்சன் காரணமாக ரன் ஏதும் எடுக்காமல் விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

pant 1

இவரின் இந்த மோசமான ஷாட் செலக்சன் அவ்வப்போது இந்திய அணிக்கு பின்னடைவை தருகிறது. அதனை மாற்றிக் கொண்டு அவர் சற்று நேரம் நிதானித்த பின்னர் அதிரடியாக விளையாடினால் அது அணிக்கு கூடுதல் பலத்தை தரும் என்று அனைவரும் அவருக்கு அறிவுரை செய்து வருகின்றனர். ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாத ரிஷப் பண்ட் நேற்றைய போட்டியிலும் வந்த முதல் பந்திலேயே தூக்கி அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவர் ஆட்டமிழந்த போது களத்தின் மறுமுனையில் நின்ற முன்னாள் கேப்டன் விராட் கோலி அவரது இந்த ஷாட் செலக்ஷனை பார்த்து தனது அதிர்ப்தியை வெளிப்படுத்தினார். முதல் பந்திலேயே தூக்கி அடித்து ஆட்டம் இழந்து பண்ட் வெளியேறிய போது அவரை முறைத்தபடி பார்த்த விராட் கோலி “இதெல்லாம் என்னடா ஷார்ட்” என்கிற ரீதியில் அவர் மீது கடுப்பு அடைந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement