ஜோ ரூட் ஆட்டமிழந்து வெளியேறியதும் கோபத்துடன் கெட்ட வார்த்தையும் கூறி வழியனுப்பிய கோலி – வைரலாகும் வீடியோ

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

cup

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருக்கும். ஆனால் அந்த அத்தனை கணக்குகளுக்கும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முட்டுக்கட்டை போட்டு உள்ளனர். அக்சர் படேல் 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனால் இங்கிலாந்து 48.4 ஓவர்களில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி குவித்த குறைந்தபட்ச ஸ்கோர்களில் இது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

axar1

இந்நிலையில் இந்த போட்டியின் 22ஆவது ஓவரின் போது இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் வைத்து வெளியேற்றினார். அப்பொழுது எப்போதுமே களத்தில் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் கோலி இந்த முறையம் அவ்வாறே நடந்துகொண்டார்.

ஜோ ரூட் ஆட்டமிழந்து வெளியேறிய போது இந்த விக்கெட் கொண்டாட்டத்தை சற்று ஆக்ரோஷமாகப் கொண்டாடனார். மேலும் அவர் ஆங்கிலத்தில் பயன்படுத்தும் ஒரு கெட்ட வார்த்தை கூறி உள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement