இரண்டாவது டி20 போட்டி : இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்களை செய்த கேப்டன் கோலி – விவரம் இதோ

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது டி20 போட்டி தற்போது அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் துவங்கியுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க இந்த 2ஆவது போட்டியில் எப்படியாவது வெற்றி அடைந்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

- Advertisement -

சற்று நேரத்திற்கு முன் டாஸ் போடப்பட்டது. பிறகு டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். எப்போதுமே இந்திய அணிக்கு சேசிங்கின் போது ஒரு நல்ல அனுபவம் இருக்கும் என்பதனால் இந்த போட்டியில் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார்.

இந்த போட்டியில் இந்திய அணியில் உள்ள மாற்றங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் கடந்த போட்டியில் சிறப்பான தொடக்கத்தை அளிக்க தவறிய ஷிகர் தவன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரராக இஷன் கிஷன் துவக்க வீரராக களமிறங்க உள்ளார். அதேபோன்று சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இணைந்துள்ளார்.

sky 1

இவர்கள் இருவரும் எந்த போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியிலேயே கோலி இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு அளித்துள்ளார். ஹார்டிக் பாண்டியா ஐந்தாவதாக பவுலராக இந்த போட்டியில் 4 ஓவர் முழுவதையும் வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sky

இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரது வருகையால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சற்று பலப்பட்டு உள்ளது என்றே கூறலாம். கேப்டன் கோலியின் இந்த மாற்றங்கள் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement