இனி வாய்ப்பே கிடையாது என்று நினைத்த வீரருக்கு வாய்ப்பளித்த கோலி – விவரம் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த இந்திய அணி அடுத்தாக தற்போது இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி அகமதாபாத் மைதானத்திலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ம் தேதி புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒன்றரை வருடமாக கிரிக்கெட் விளையாட இஷாந்த் ஷர்மா தற்போது இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இஷாந்த் சர்மாவுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த ஐபிஎல் தொடர் முற்றிலும் விளையாடாமல் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ishanth

இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவர் இடம்பெறவில்லை. இஷாந்த் ஷர்மா கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்திருக்கிறார். இதனால் தற்போது இஷாந்த் சர்மா எந்த பார்மில் இருக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஒருவேளை முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இஷாந்த் சர்மா இடம்பெற்றால் சிறப்பாக விளையாடுவாரா என்பதும் சந்தேகமாக இருந்தது. ஆனாலும் இன்றைய முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் கோலி இஷாந்த் சர்மாவுக்கு வாய்பளித்துள்ளார்.

Ishanth-2

இஷாந்த் சர்மாவை கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி மிஸ் செய்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது இங்கிலாந்து தொடரில் அவர் இடம்பெற்றிருப்பது நல்ல செய்தியாக இருந்தாலும் அவரது ஃபார்ம் கேள்விக்குறியாக இருக்கிறது.

Advertisement