மைதானத்தில் அத்துமீறிய ரசிகர். தட்டிக்கொடுத்து வழியனுப்பிய கோலி – விவரம் இதோ

Kohli-fan
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ind 1

- Advertisement -

இந்நிலையில் இந்தூரில் நடந்த இந்த முதல் டெஸ்ட் போட்டியில் மைதான பாதுகாவலர்களை மீதி ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து நேராக கோலியை நோக்கி சென்று அவர் காலில் விழுந்தார். உடனே சுதாரித்த கோலி அவரை எழுப்பி அவர் தோளில் கை போட்டுக்கொண்டு அவருக்கு அறிவுரை வழங்கி பேசிக் கொண்டிருந்தார்.

அதற்குள் அந்த ரசிகரை மைதான பாதுகாப்பாளர்கள் வந்து கூட்டிச் சென்றனர். எனினும் அவரை எதுவும் செய்ய வேண்டாம் என்றும் பாதுகாப்பாக மைதானத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்று கோலி கேட்டுக்கொண்டார். மேலும் போலீசார் தரப்பில் நடந்த விசாரணையில் அவரின் பெயர் சூரஜ் என்றும், 22 வயதான அவர் சமையல் வேலை செய்யும் நபர் எனவும் தெரியவந்துள்ளது. கோலியின் தீவிர ரசிகரான அவர் கோலியை நேரில் பார்ப்பதற்காக மைதானத்திற்குள் அத்துமீறி ஓடினார் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

kohli 2

kohli 1

அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். இதேபோன்று கோலியின் ரசிகர்கள் மனத்தில் அத்துமீறி நுழைவதை இது முதல் முறை அல்ல. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து தான் வருகிறது. இதனால் வீரர்களின் பாதுகாப்பில் கேள்விக்குறி எழுந்துள்ளதாக அவ்வப்போது பல முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement