இந்த தெ.ஆ தொடரில் சஹா விக்கெட் கீப்பராக செயல்படுவார். அதன் காரணம் இதுதான் – கோலி பேட்டி

kohli
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாளை அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

Saha

- Advertisement -

இந்நிலையில் நாளை துவங்க உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணி தற்போது தயாராகிவிட்டது இதனை விராட் கோலி தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி தொடர்ந்து சிறப்பாக செயல்படாமல் இருக்கும் விக்கெட் கீப்பர் பண்ட் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றாலும் ஆடும் லெவனில் இடம் பெற மாட்டார் என்று அறிவித்தார் .

மேலும் அவருக்கு பதில் காயம் காரணமாக கடந்த சில தொடர்களாக ஓய்வில் இருந்த சகா மீண்டும் இந்திய அணியின் கீப்பராக செயல்பட உள்ளார். மேலும் அதன் காரணத்தையும் கோலி கூறியுள்ளார் அது குறித்து கோலி கூறியதாவது : இந்திய மைதானத்தில் பந்துகள் நன்றாக திரும்பும் என்பதால் இந்த தொடருக்கு விக்கெட் கீப்பராக சஹாவை தேர்வு செய்துள்ளோம்.

saha

அவர் பல போட்டிகளில் விளையாடி விக்கெட் கீப்பிங் அனுபவமுள்ளவர் மேலும் இதுபோன்ற இந்திய மைதானங்களில் அவர் சிறப்பாக கீப்பிங் செய்யும் திறன் உடையவர் என்பது அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் அவர் சிறப்பாக விடுவார் என்பதால் அவரை தேர்ந்தெடுத்து உள்ளோம் என்று கூறியுள்ளார். இதனால் பண்ட் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.

Advertisement