இவர்கள் இருவரும் அடுத்தப்போட்டியிலும் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் – கோலி உறுதி

kohli
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது.

rahul

- Advertisement -

நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரஹானே 81 ரன்கள் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். துவக்க வீரர் லோகேஷ் ராகுல் 44 ரன்களும், விஹாரி 32 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : ராகுல் மற்றும் அகர்வால் அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக துவக்க வீரராக களம் இறங்குவார்கள். ஏனெனில் மயங்க் அகர்வால் ஆஸ்திரேலிய தொடரின் சரி அதற்கு முன்பும் சரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறா.ர் எனவே அவருக்கு வாய்ப்பு அளிப்பது அவசியம்.

rahul 1

அதுமட்டுமின்றி ராகுல் துவக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடினார். அதன் பிறகு சற்று தடுமாறுகிறார் இருந்தாலும் அவர் மேலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், அவரது இடத்தை நிலைப்படுத்தும் அவருக்கான வாய்ப்பு வழங்க உள்ளேன் எனவே இவர்கள் இருவருமே இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்று கோலி உறுதியாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement