பண்ட் மற்றும் சஹா இருவரில் முதல் டெஸ்ட் போட்டிக்கு கோலி யாரை தேர்வு செய்யப்போகிறார் தெரியுமா ? – விவரம் இதோ

Saha
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை முடித்து அடுத்து அந்த அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2ஆம் தேதி துவங்க உள்ளது.

Ind-1

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்ட விக்கெட் கீப்பர் சஹா அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் தற்போது இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட்டிலும் தொடர்ந்து கீப்பராக விளையாடி வரும் பண்டும் இடம்பெற்றுள்ளார். இதனால் முதல் போட்டிக்கு யாரை கோலி தெரிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அந்த கேள்விக்கு பதிலாக தற்போது விடை கிடைத்துள்ளது. அதன்படி பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் மட்டுமே அவர் அசத்தி வருகிறார். விக்கெட் கீப்பிங் அவர் சரியாக செயல்படுவதில்லை ஆனால் சஹா உலகத்தரம் வாய்ந்த விக்கெட் கீப்பர் என்பது நாம் அறிந்ததே. எனவே இந்தியாவில் ஸ்விங் மைதானங்களில் சஹாவே கீப்பராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

saha

மேலும் பண்ட் இதுபோன்ற ஸ்விங் மைதானங்களில் பந்தை கீப்பிங் செய்ய கணிக்க முடியாமல் தவர விடுவார் ஆனால் சஹா ஒருபோதும் அப்படி செய்ததில்லை மேலும் போதுமான அளவு அவரால் பேட்டிங் செய்ய முடியும் எனவே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சஹா களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் கோலியின் விருப்பமாக அதுவே இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement