இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பலத்த எதிர்ப்பார்ப்புடன் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சு இன்று அபாரமாக இருந்தது அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் வேகப்பந்துவீச்சாளர்களே முழுமையாக பந்து வீசினார்கள். சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 1 ஓவர் மட்டுமே வீசினார். இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதன் காரணமாக இந்திய அணி பங்களாதேஷ் அணியை விட 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் 32 ரன்களை எடுத்த போது கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தினார்.
Milestone Alert????: @imVkohli completes 5000 Test runs as #TeamIndia captain. @Paytm #PinkBallTest #INDvBAN pic.twitter.com/fu7fozfoUu
— BCCI (@BCCI) November 22, 2019
அது யாதெனில் இதுவரை கேப்டனாக 5000 டெஸ்ட் ரன்கள் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றார். மேலும் சர்வதேச அளவில் 5000 ரன்களை கடந்த ஆறாவது கேப்டன் என்ற மைல்கல்லயும் இன்று படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய நாள் ஆட்டநேர முடிவில் கோலி 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளதால் நாளை அவர் சதம் அடிக்க ஒரு அற்புதமான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.