ஒருத்தரை சீண்டினா 11 பேர் வருவோம். சும்மா விடமாட்டோம் – இங்கிலாந்தை எச்சரித்த ராகுல்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் ஐந்தாம் நாளான நேற்று இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 298 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி ஆனது 120 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ind

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் முதல் வெற்றியை பெற்று அசதியுள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் ஒன்பதாவது விக்கெட்டிற்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்நிலையில் அவர்கள் பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து வீரர்கள் மார்க் வுட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் பும்ராவிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் போட்டி பரபரப்பானது. இந்த சம்பவத்திற்கு பிறகுதான் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்நிலையில் போட்டி முடிந்து இந்த நிகழ்வு குறித்து பேசிய ராகுல் கூறுகையில் :

bumrah

இரு பலமான அணிகள் மோதும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம் தான். எங்களுக்கும் போட்டியின் போது இதுபோன்று சற்று வார்த்தைப் போரில் ஈடுபடுவது பிடிக்கும். ஆனால் எங்களின் அணியில் ஒருவரை நீங்கள் தாக்கினாலோ, பேசினாலோ நாங்கள் 11 பேரும் அவருக்கு பக்கபலமாக நின்று பதிலடி கொடுப்போம்.

bumrah 1

எங்களது பௌலிங் இன் போதும் நாங்கள் உத்வேகத்துடனும், ஆக்ரோஷத்துடனும் இருந்தோம். அதனாலேயே எங்களால் வெற்றி பெற முடிந்தது என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement