இந்த 2 போட்டிகளை வைத்து அவரின் தரத்தை மதிப்பிட வேண்டாம். அவர் ஒரு சாம்பியன் – கே.எல் ராகுல் புகழாரம்

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இதனை அடுத்து இரண்டாவது போட்டி சிட்னி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்களை குவித்தது.

indvsaus

- Advertisement -

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் சதம் அடித்தார். அவரைத்தவிர வார்னர், பின்ச், லாபுஷன் மேக்ஸ்வெல் என நால்வரும் அரைசதம் அடித்தனர். அதன் பின்னர் 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி மீண்டும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்திய அணி சார்பாக கேப்டன் கோலி 87 பந்துகளில் 89 ரன்களையும், ராகுல் 66 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களை குவித்தார். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்தாலும் இந்த போட்டியிலும் இந்திய அணியின் மோசமான பந்து வீச்சினாலே தோல்வி கிடைத்தது.ஆட்டநாயகனாக ஸ்மித் தேர்வானார்.

smith 1

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து இணையத்தளத்திற்கு பேட்டியளித்த இந்திய அணியின் துணை கேப்டன் ராகுல் பேசுகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடைசியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அதனால் வீரர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது நேரம் எடுக்கும்.

- Advertisement -

1 – 2 போட்டிகளை வைத்து அவரின் தரத்தை குறைத்து மதிப்பிட்டு பேசுவது சரியானது கிடையாது. பும்ரா போன்ற சாம்பியன் வீரர்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நீண்ட நாள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் எனவே அவர் மீண்டும் நிச்சயம் சிறப்பாக பந்து வீசுவார். அது வெகு விரைவில் நடக்கும்.

Bumrah

அதுமட்டுமின்றி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மைதானங்கள் நன்கு பேட்டிங் செய்யக்கூடிய மைதானங்கள் என்பதால் பல ஜாம்பவான்கள் பவுலர்களே அங்கு பந்துவீச திணறி இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே மீண்டும் பும்ரா வெகு சீக்கிரம் இயல்பு நிலைக்குத் திரும்புவார் அவர் நம்பர் 1 பவுலர் என ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement