இந்திய அணியின் பெஸ்ட் பினிஷராக வர ஐபிஎல் அனுபவம் உதவும்..! பஞ்சாப் அதிரடி வீரர் சபதம் ..? – யார் தெரியுமா..?

Klrahul
- Advertisement -

இந்த மாதம் (ஜூன்) இந்திய கிரிக்கெட் அணி ஐயர்லாந்து சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த போட்டிகளை தொடர்ந்து இங்கிலாந்திற்கு செல்லும் இந்திய அணி 4 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரிலும் பங்கேற்கவுள்ளது. இந்த இரு தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ இன்று அறிவித்துள்ளது. இந்த தொடரில் விளையாட இந்திய அணியில் இடம்பெற்றுள்ள கே எல் ராகுல் ஐபிஎல் போட்டிகளின் போது பெற்ற அனுபவம் இந்த தொடரில் சிறந்த பினிஷாராக தன்னை மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
rahul

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வந்த கே எல் ராகுல்,அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வந்தார் . நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் ஆடிய இவர் 659 ரன்களை குவித்துள்ளார், அதில் 6 அரை சதமும் அடங்கும். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 14 பந்துகளில் 50 ரன்களை அடித்து ஐ.பி.எல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரை சதத்தை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த மாதம் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ராகுல் கூறுகையில் ” டி20 போட்டிகளை பொறுத்த வரை எப்போதும் சூழ்நிலைக்கு ஏற்றார் போல விளையாட வேண்டும் என்று தான் நான் நம்புகிறேன். டி20 போட்டிகளில் ஒவ்வொரு பந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. அணியின் தேவை அறிந்து அதற்கேற்றாற் போல் விளையாட வேண்டும்.இங்கிலாந்து தொடரில் ஐபிஎல் 18 போது பெற்ற அனுபவத்தை பயன்படுத்தி விளையாடுவேன்.
rahul
ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய போது அணிக்காக போட்டியை பினிஷ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆடுவேன். போட்டியை பினிஷ் செய்யும் நிலையில் இருக்கும் போது தான் வீரர்கள் மிகவும் விரும்புவார்க்க்ள். இந்த ஐபிஎல் தொடர் என் மனதை உறுதி படுத்த ஏதுவாக இருந்தது ” என்று கூறியுள்ளார்.

Advertisement