இந்த 70 ரன்ஸ் சதத்துக்கு சமம்.. ராகுல் இப்படி ஆடுறத பாக்க காத்திருந்தோம்.. இந்திய லெஜெண்ட் பாராட்டு

Kl rahul vs RSA
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் துவங்கியது. அதில் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 208/8 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. குறிப்பாக மழை வந்ததால் பிட்ச் பேட்டிங்க்கு சவாலாக மாறிய நிலையில் துல்லியமாக பந்து வீசிய தென்னாபிரிக்க பவுலர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கேப்டன் ரோஹித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 17, கில் 2, விராட் கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

சதத்துக்கு சமம்:
அதனால் 107/5 என தடுமாறிய இந்தியா 200 ரன்கள் தொடுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்காவுக்கு சவாலை கொடுத்தார். குறிப்பாக சுமாரான பந்துகளில் அதிரடி காட்டிய அவர் நல்ல பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டு அரை சதம் கடந்து 10 பவுண்டரி 2 சிக்சருடன் 70* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி வருகிறார்.

இந்நிலையில் கடினமான பிட்ச்சில் அடித்த இந்த 70 ரன்கள் சதத்திற்கு சமம் என்று கேஎல் ராகுலுக்கு ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் காயத்தால் சமீப காலங்களில் தடுமாறிய ராகுல் இப்படி விளையாடுவதை பார்க்க காத்திருந்ததாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இன்று அவர் அடித்த அரை சதம் சதத்திற்கு சமமாகும். நாளை சதமடிக்கிறாரா இல்லையா என்பது அவருடன் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பொறுத்து அமையும். ஆனால் சததத்திற்கு அவர் தகுதியானவர். ஒருவேளை அதை அடிக்காமல் போனாலும் என்னை பொறுத்த வரை இந்த ரன்கள் சதத்திற்கு சமமாகும். முதல் பந்திலிருந்தே அவருடைய பேலன்ஸ் நன்றாக இருக்கிறது”

இதையும் படிங்க: 2 வருடத்தில் 7வது முறை.. உங்களுடைய பலமே எதிரியாகிடுச்சு.. ரோஹித் தவறை சுட்டிக்காட்டிய சஞ்சய் மஞ்ரேக்கர்

“குறிப்பாக அவருடைய தலை நேராக இருப்பதால் பந்தை எளிதாக விட முடிகிறது. தன்னுடைய உயரத்தை பயன்படுத்தி அவரால் பவுன்சரை அடிக்க முடிகிறது. தம்முடைய பேலன்ஸை பயன்படுத்தி அவர் முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் விளையாடுவது அபாரமாக இருக்கிறது. அவருடைய திறமையை நாம் நீண்ட காலமாக அறிவோம். இருப்பினும் 8 – 9 மாதங்கள் காயத்தால் அவர் தடுமாற்றமாக செயல்பட்டார். தற்போது வித்தியாசமான ராகுலை பார்க்கிறோம். இத்தனை நாட்களாக நாம் பார்க்க ஆசைப்பட்ட ராகுலை தற்போது பார்ப்பது அருமையாக உள்ளது” என்று கூறினார்.

Advertisement