இவங்க ரெண்டு பேரும் டீமுக்கு செட் ஆக மாட்டாங்க. உடனே தூக்குங்க – வலுக்கும் எதிர்ப்பு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் அடுத்து வந்த இரு போட்டிகளிலும் அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Deepak-Chahar

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் சரியாக விளையாடாத இரண்டு நபர்களை அணியில் சேர்க்க க்கூடாது அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க கூடாது என்று ரசிகர்கள் இணையத்தில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் யாரெனில் பந்து வீச்சில் அதிக ரன்களை வாரி வாரி வழங்கும் கலீல் அகமது பங்களாதேஷ் அணி இடமே இவ்வளவு ரன்களை கொடுத்தால் டி20 உலகக் கோப்பையின் போது பலம் வாய்ந்த அணிகள் இடையே எவ்வளவு ரன்களை கொடுப்பார் என்பது உறுதியில்லை.

எனவே அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் சேர்த்து வாய்ப்பு அளிக்கலாம் என்றும் மேலும் தொடர்ச்சியாக சொதப்பி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பண்டிற்கு பதிலாக விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளித்து பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஏனெனில் பண்ட்க்கு போதுமான வாய்ப்பு கொடுத்தும் அவர் சரியாக விளையாடாமல் இருக்கிறார்.

Khaleel

இருப்பினும் அவருக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் சப்போர்ட் செய்வதால் அவர் அணியில் இடம்பிடித்து வருகிறார். இதற்கு பதிலாக சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு அளித்து பார்த்து பின்னர் தொடர்ந்து பண்டுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்றும் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இவர்கள் 2 பேரும் டி20 அணிக்கு செட் ஆக மாட்டார்கள் என்றும் அவர்களை உடனடியாக மாற்றி அவருக்கு பதிலாக வேறு வீரர்களை சேர்க்குமாறு ஒரு பக்கம் எதிர்ப்பு வலுத்து வருவது உணமையே.

Advertisement