இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி தற்போது இரண்டு மாதங்கள் ராணுவப் பயிற்சி எடுத்து வருகிறார். அவர் தற்போது காஷ்மீர் பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.
அதன்படி காஷ்மீரின் பாரமுல்லா என்ற பகுதியில் ரோந்துக்கு சென்றபோது அங்கிருந்த மக்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் டோனியை எதிர்த்து கோஷம் இட்டதாகவும் தெரிகிறது மேலும் பாகிஸ்தான் அணி வீரரானஅப்ரிடி பேர் சொல்லி அவரை ஆதரிப்பதாகவும், தோனியை கண்டுகொள்ளாததும் தகவல்களாக நமக்கு கிடைத்தது.
ஆனால் இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தும் செயலாக காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான் வீரரான அப்ரிடி பெயரை கோஷமிடும் வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.