MS Dhoni : தோனிக்கு சரியான மாற்று வீரர் இவரே. பண்ட் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

Prasad
- Advertisement -

வரும் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மடற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

உலகக்கோப்பை இந்திய அணி தேர்வு குறித்து பேசிய எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில் : தோனி இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருப்பார். ஒருவேளை அவர் ஆடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திகே செயல்படுவார். பண்ட் இளம் வீரர் அவருக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அனுபவத்தின் காரணமாகவே தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

karthik

4 ஆவது வீரராக விளையாட ராகுல் மற்றும் விஜய் ஷங்கர் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவும் என்றும் தேவைப்பட்டால் கோலி 4 ஆவது வீரராக இறங்கும் பட்சத்தில் ராகுல் 3 ஆவது வீரராக இறங்க வாய்ப்பு உள்ளதாக பிரசாத் தெரிவித்தார்.

Advertisement