Worldcup : இந்திய அணி உலககோப்பை தொடரில் அரையிறுதி வரை செல்லும். அதற்குமேல் இதுதான் – கபில் தேவ்

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான

kapil3
- Advertisement -

இந்த மே மாதம் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயார் என்றே கூறலாம். இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இந்நிலையில், இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து பறக்க உள்ளது. கடந்த பல தொடர்களாக இந்திய அணி மிகச்சிறந்த பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்தியா அணியின் வீரர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.

இந்த அணியில் கோலி கேட்டன் மற்றும் ரோஹித் துணைகேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் இதோ : 1. கோலி 2. ரோஹித் 3. தவான் 4. ராகுல் 5. ஜாதவ் 6. தோனி 7. ஹார்டிக் பாண்டியா 8. விஜய் ஷங்கர் 9. தினேஷ் கார்த்திக் 10. பும்ரா 11. புவனேஷ்குமார் 12. ஷமி 13. குல்தீப் யாதவ் 14. சாஹல் 15. ஜடேஜா

Team-1

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரின் இந்திய அணியின் நிலைமை குறித்து கபில் தேவ் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி மற்ற அணிகளை வீழ்த்தும் சமபலத்துடன் உள்ளது. தற்போது உள்ள நிலையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதி வரை முன்னேறும். மேலும், நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் அணிக்கு அரையிறுதி வரை செல்ல வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்திய அணி அரையிறுதி வரை நிச்சயம் முன்னேறும். அதன்பின்னர் இந்திய அணியின் தனிப்பட்ட திறமையும், அதிர்ஷ்டமும் மட்டுமே இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று கபில் தேவ் கூறினார். இருப்பினும் இந்திய அணியில் தோனி, கோலி, ரோஹித் மற்றும் தவான், பும்ரா, ஷமி போன்ற பலதிறமையான வீரர்கள் இருப்பதால் இந்திய அணி உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் என்று நம்பலாம் என்பது எங்களின் கருத்து.

Advertisement