தோனி ஓய்வு பெறும்போது இதுதான் நடக்கும். மனம்திறந்து வருந்திய – கபில் தேவ்

kapil3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்து அந்த தொடரை கைப்பற்றி தர முக்கியமான காரணமாக திகழ்ந்தார். மேலும் இந்திய அணிக்காக முதல் உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் ஆகவும் தன்னை உலகத்திற்கு நிரூபித்தார்.

kapildev

- Advertisement -

இந்நிலையில் கபில் தேவின் வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாக்கப்பட உள்ளது. மேலும் இது தமிழிலும் தயாராகிறது. 83 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ரன்வீர் சிங் கபில்தேவ் ஆக நடித்துள்ளார். மேலும் தமிழ் நடிகர் ஜீவா ஸ்ரீகாந்த் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விளம்பர நிகழ்ச்சி ஆகியவை நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் கபில்தேவ் மற்றும் படக்குழுவினர் மட்டுமின்றி தமிழக வீரரும் 83 உலகக்கோப்பை அணியின் முக்கிய வீரருமான ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்பிறகு கபில்தேவ் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது :’

Dhoni-1

தோனி பல ஆண்டுகளாக நாட்டிற்காக சிறப்பான விளையாட்டை கொடுத்துள்ளார். அவர் நிச்சயம் ஓய்வு பெறுவார் ஆனால் அது விரைவிலோ அல்லது தாமதமாக நடக்கும். அவர் எப்போதும் ஓய்வு அறிவிப்பார் என யாருக்கும் தெரியாது. ஆனால் தோனி ஓய்வு பெற்றால் அது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்று வேதனையுடன் அவர் தெரிவித்து குறிப்பிடத்தக்கது.

Advertisement