புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய சச்சின், கங்குலி, லட்சுமணன் தேவையில்லை. இந்த புதிய குழு முடிவு எடுக்கட்டும் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

ravi
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Ravi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி இந்திய அணியில் தொடர்ந்து பயிற்சியாளராக நீடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் வழக்கமாக இந்திய அணியின் பயிற்சியாளர் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் லட்சுமணன் ஆகியோர் கொண்ட ஆலோசனைக் கமிட்டி தான் பயிற்சியாளரை தேர்வு செய்து வாரியத்திற்கு பரிந்துரை செய்யும்.

kapil3

ஆனால் இலட்சுமணன் சச்சின் ஆகியோருக்கு இரட்டை ஆதாய பதவி சிக்கல் இருப்பதால் அவர்களுக்கு பதில் மகளிர் அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்த கபில்தேவ் தலைமையிலான குழுவே இந்த பயிற்சியாளரையும் தேர்வு செய்தோம் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement