இலங்கை அணிக்கெதிரான இவரது ஆட்டம் வேறலெவல். நல்ல டேலன்ட் பிளேயர் இவரு – கம்ரான் அக்மல் புகழாரம்

Kamran
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது தற்போது இலங்கை கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்திய அணி அபார வெற்றி பெற்று இலங்கை அணியை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

ind

இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது இலங்கை அணி முதலில் விளையாடி 275 ரன்களை குவிக்க 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய இந்திய அணி துவக்கத்தில் விக்கெட்டுகளை அடித்தடுத்து இழந்தாலும் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி ரன் குவித்தது.

- Advertisement -

அதுமட்டுமின்றி கடைசி நேரத்தில் வெற்றிக்கு தேவையான போது தீபக் சாஹர் 82 பந்துகளில் 69 ரன்களை குவித்து தனது சிறப்பான பேட்டிங்கின் மூலம் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரின் இந்த சிறப்பான ஆட்டத்தின் காரணமாக ஒரே இரவில் அவர் ஹீரோவாக மாறினார்.

deepak 1

இந்நிலையில் தற்போது இந்த இரண்டாவது போட்டியின் போது இந்திய அணி பெற்ற வெற்றிக்கு பல்வேறு வீரர்களை பலரும் பாராட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் சூரியகுமாரின் யாதவின் ஆட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது சூரியகுமார் விளையாடிய விதம், அவரது ஆட்டத்திறன் ஆகியவற்றில் உள்ள முதிர்ச்சி அதிகம் தென்பட்டது.

sky

அவர் விளையாடிய விதத்தை பார்த்தால் 70 – 80 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் போல் சிறப்பாக விளையாடினார். உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அவருடைய அனுபவம்தான் இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாட கை கொடுத்தது என சூர்யகுமார் யாதவ் குறித்து கம்ரான் அக்மல் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement