தோனியுடன் ஒப்பிட்டு குலசேகராவின் ஓய்வு குறித்து கருத்தினை தெரிவித்த கைப் – வைரலான போஸ்ட்

- Advertisement -

இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா சில தினங்களுக்கு முன்பு ஓய்வு அறிவிப்பினை அறிவித்தார். அதற்கு அடுத்து தற்போது இலங்கை அணியின் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகரா நேற்று முன்தினம் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.

Kulasekara 2

- Advertisement -

2014ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பை வெல்லும் போது அந்த அணியில் இருந்தவர். மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் நம்பர் பந்துவீச்சாளராக இவர் திகழ்ந்துள்ளார். 37 வயதாகும் இவர் 2003 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகினார். இதுவரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் இவர் 21 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 184 ஒருநாள் போட்டியில் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் குலசேகரா ஓய்வு அறிவிப்பை பற்றி இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது : குலசேகரா ஒரு கட்டத்தில் நம்பர் ஒன் பவுலராக திகழ்ந்து இருக்கலாம். ஆனால் குலசேகரா பற்றி எங்களுடைய மறக்க முடியாத ஒரு தருணம் யாதெனில் உலகக்கோப்பை இறுதி போட்டியில் குலசேகரா பந்துவீச்சில் தோனி அடித்த கடைசி சிக்ஸர் என்று பதிவிட்டுள்ளார்.

முஹம்மது கைப்பின் இந்த பதிவினை தோனியின் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் பலரும் பகிர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement