டி20 போட்டியிலும் இவர் நிச்சயம் இரட்டைசதம் அடிப்பார். எனக்கு நம்பிக்கை இருக்கு – கைப் ஓபன் டாக்

Kaif
- Advertisement -

ஒருநாள் போட்டியில் இரட்டை ச்சதம் அடிப்பது என்பது ஒரு காலத்தில் மிகவும் கடினம் என்று இருந்தது. ஆனால் அவற்றை எல்லாம் தவிடுபொடியாக்கி சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் நபராக 200 ரன்களை விளாசினார். ஆனால் அதன்பிறகு துவக்கவீரராக களமிறங்கி தற்போது மூன்று இரட்டை சதங்கள் விளாசி விட்டார் ரோகித் சர்மா. அதேபோல் டி20 போட்டிகளில் 4 சதங்கள் விளாசியுள்ளார்.

- Advertisement -

இவர் இப்படி இருக்க இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் ரோகித் சர்மா குறித்து தனது ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் பேசியதாவது : டி20 போட்டியில் இந்திய அணியில் இரட்டை சதமடிக்கக் கூடிய ஒரு வீரர் இருக்கிறார். அவரால் நிச்சயம் இந்த சாதனையை படைக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் அவர்தான் ரோஹித் சர்மா .

அவர் ஆட்டத்தின் போக்கை பார்க்கையில் டி20 போட்டியிலும் கூட இரட்டை சதம் அடித்து விடுவார். 50 ஓவர் போட்டியில் 100 ரன்களை கடந்த பிறகு அடுத்த 100 ரன்களை வெகு சீக்கிரமாக எடுத்துவிடுகிறார். இவர் இறுதிவரை களத்தில் இருந்தால் இந்திய அணியின் ஸ்கோர் 400 வரை சென்று விடுகிறது. இதே வேலையை இவரால் டி20 போட்டியிலும் செய்ய முடியும் என்று கூறியுள்ளார் முகமது கைப்.

Rohith

ஏற்கனவே ஒரு நாள் போட்டிகளில் 7 முறை 150 ரன்களுக்கு மேல் விளாசிய ரோகித் சர்மா கடந்த ஓராண்டில் மட்டும் 7 சதங்களை விளாசியுள்ளார். அவற்றில் 5 சதங்கள் உலககோப்பை தொடரில் மட்டுமே அடிக்கப்பட்டது. இப்படி இருக்க முகமது கைது சொல்வதுபோல டி20 போட்டியிலும் இவர் இரட்டை சதம் அடிப்பதை பார்க்க இன்னும் வெகு காலம் இல்லை என்றே தெரிகிறது.

- Advertisement -

ஆனால் துரதிஸ்டவசமாக விராட் கோலியியை பற்றி பேசவேயில்லை முகமது கைஃப். விராட் கோலியும் அதற்கு இணையான வீரர் தான். ஆனால் அவர் தற்போது வரை ஒரு இரட்டை சதம் கூட அடிக்கவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சற்று கசப்பான செய்தி தான். இருப்பினும் கோலியை விட ரோஹித் அதிரடியாக ஆடுவதில் வல்லவர்.

Rohith

கொரோனா ஓய்வில் இருக்கும் இந்திய பிரபலங்கள் அனைவரும் நாள்தோறும் இதுபோன்ற ஒரு கருத்தினை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ரோஹித் சர்மா குறித்து கைப் பேசியுள்ள இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement