ஆஸி.யில் இந்த சம்பவம் நடைபெற்றது. ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் வருத்தம் அளிக்கிறது – கோச் வருத்தம்

Langer
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னி மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வீரர்களின் ஆட்டத்தை விட ரசிகர்களின் இனவெறி குறித்த சர்ச்சை தான் அதிகமாக விஸ்வரூபமாக வெடித்துள்ளது. இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஆகியோர் மீது பார்வையாளர்கள் இனவெறி கருத்துக்களை கூறி சர்ச்சையை எழுப்பினர்.

Siraj 2

- Advertisement -

இதுதொடர்பாக மூன்றாம் நாள் ஆட்டத்திலேயே சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் மைதானத்தில் இருந்த அம்பயர்களிடம் தங்களது புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் 4-வது நாளான இன்றும் ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதாக மேலும் அவர்கள் இருவரைத் தவிர ரோகித் மற்றும் சைனி ஆகியோரை குறிப்பிட்டு பேசியதாகவும் புகார் இன்று வைக்கப்பட்டது.

மேலும் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சிராஜ் பந்து வீசாமல் நேரடியாக சென்று அம்பயரிடம் தனது புகாரை தெரிவித்தார். இதனால் போட்டி 10 நிமிடம் வரை தடைபட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அதிர்ச்சி அடைந்த கேப்டன் ரஹானே மற்றும் இந்திய வீரர்கள் அனைவரும் நடுவரிடம் சென்று புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக மைதானத்தில் இனவெறி குறித்து குரல்களை எழுப்பிய ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான நிர்வாகிகள் வெளியேற்றினர்.

Siraj

ஆஸ்திரேலிய ரசிகர்களின் இந்த செயலுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘ஒரு வீரராக இந்த சம்பவத்தை நான் வெறுக்கிறேன். ஒரு பயிற்சியாளராகவும் வெறுக்கிறேன்.

உலகின் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்களை நாம் பார்த்திக்கிறோம். ஆஸ்திரேலியாவில் இதுபோன்று நடப்பது உண்மையிலேயே கவலை அளிப்பதாக இருக்கிறது’’ என்றார்.

Advertisement