என்னப்பா இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வந்த சோதனை – நேற்று இதனை கவனித்தீர்களா ?

Ishanth-2
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பலத்த எதிர்ப்பார்ப்புடன் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ind 1

இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் வேகப்பந்துவீச்சாளர்களே முழுமையாக பந்து வீசினார்கள். நேற்று முழுவதும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினார்கள் என்றே கூறவேண்டும். இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நேற்று நடந்த நிலைமையை கவனித்தீர்களா ? மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்ததால் நேற்று இந்திய அணி வீசிய 30.3 ஓவர்களில் ஒரு ஓவரை மட்டுமே சுழற்பந்து வீச்சு பவுலரான ஜடேஜா வீசினார். மற்றபடி அனைத்து ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்கள் வீசினர். அஷ்வின் ஒரு ஓவர் கூட வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Jadeja 3

அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்தது. இதன் காரணமாக இந்திய அணி பங்களாதேஷ் அணியை விட 68 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி 59 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Advertisement