விராட் கோலியின் விக்கெட்டை அதிகமுறை வீழ்த்தி இருக்கிறேன். இந்த முறையும் வீழ்த்துவேன் – சவால் விட்ட ஆஸி வீரர்

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது 17 ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. 17ஆம் தேதி துவங்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் பகலிரவு போட்டியாக அடிலெய்ட் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போதைய துவங்கியுள்ள நிலையில் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

INDvsAUS

- Advertisement -

அந்த வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஹேசில்வுட் இந்திய அணி குறித்தும் இந்த டெஸ்ட் தொடர் குறித்தும் பல சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பல நேரங்களில் பவுன்சர் பந்து தந்திரமான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட்டுகள் வீழ்ந்த பயன்படுகின்றன, இது விளையாட்டின் ஒரு பகுதி ஆகும்.

மற்ற நாடுகளைவிட ஆஸ்திரேலியாவில் பவுன்சர் அதிகம் வீசப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியா அணி பவுலர்களும் அதிகபட்ச பவுன்சர்களை பயன்படுத்தும் வழக்கமுடையவர்கள். டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது சாதாரணமான விடயம் கிடையாது. அப்படி விக்கெட்டை வீழ்த்தமுடியவில்லை என்றால் பவுன்சர் பந்துகளை பயன்படுத்தி லெக் சைடில் பீல்டர்களை நிறுத்தினால் சீக்கிரம் விக்கெட் கிடைக்கும்.

hazlewood 1

இரண்டு அணிகளுமே இதனை முயற்சிக்கும் என்று கூறினார். மேலும் விராட் கோலி குறித்து அவர் பேசுகையில் : விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பி இருக்கிறார். இந்த தொடரில் ஏற்கனவே அவரை நான் அதிக முறை வீழ்த்திருக்கிறேன். ஒருநாள் தொடரில் மூன்று முறை டி20 தொடரில் ஒரு முறை என நான்கு முறை அவரது விக்கெட்டை வீழ்த்திய உள்ளேன் அது எனக்கு அதிர்ஷ்டம் தான்.

டெஸ்ட் போட்டியிலும் இது தொடரும் என நினைக்கிறேன். டெஸ்ட் போட்டி மற்ற இரண்டு வடிவங்களை விட கூடுதல் சவாலானது. இன்னும் இரண்டு இன்னிங்ஸ்களில் மட்டும்தான் விராட் கோலியை வீழ்த்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால் அதை சரியாக பயன்படுத்தி அவரது விக்கெட்டை கைப்பற்றுவேன் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement