- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரொம்ப அசால்ட்டா பெரிய சதம் அடிக்கனும்னா அது இவரால் மட்டுமே முடியும் – இந்திய வீரரை புகழ்ந்த பட்லர்

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக வலம் வருபவர் இந்திய அணியின் துவக்க வீரர் மற்றும் துணைக்கேப்டனான ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார். இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள் விளாசியுள்ளார். இவர் சதம் அடித்தால் நிச்சயம் பெரிய ரன்குவிப்பை தருவார் என்று ரசிகர்கள் அவரது ஆட்டத்தை வியந்து பார்ப்பதும் உண்டு.

மேலும், கடந்த வருடம் இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் 5 சதங்கள் விளாசி மொத்தம் 648 ரன்கள் குவித்தார். இதுவரை எந்த ஒரு வீரரும் எந்த ஒரு உலக கோப்பை தொடரில் இவ்வளவு ரன்கள் குவித்தது இல்லை. இதன்மூலம் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையும் அவர் வசம் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜோஸ் பட்லர் ரோகித் சர்மாவை பாராட்டி புகழ்ந்து பேசியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார் . அந்த அணியின் நேரலையில் அவர் பேசியதாவது : ரோகித் சர்மா ஒரு மிகச் சிறந்த ஆட்டக்காரர். பெரும்பாலான இந்திய வீரர்களை போல அவரும் அசாத்திய திறமை கொண்டு அற்புதமாக ஆடிக் கொண்டிருக்கிறார் .

கடந்த பல ஆண்டுகளாக அவரது ஆட்டத்தை நான் ரசித்துப் பார்த்து வருகிறேன். அவர் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது . அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் ரன் அடிக்க தொங்கவிட்டால் மிகப்பெரிய சதம் விளாசுவார். அவர் கடந்த ஆண்டிலேயே 5 சதங்கள் விளாசினார். இந்திய வீரர்களுக்கு ஷார்ட் பால் வீசி பயமுறுத்துவார்கள்.

ஆனால் ரோஹித் சர்மா அதையெல்லாம் அசாத்தியமாக அடித்து வெளியே தள்ளுவார். இவ்வாறு அவரைப் பாராட்டிப் பேசியுள்ளார் ஜோஸ் பட்லர். இந்திய அணியில் ரோஹித் துவக்க வீரராக களமிறங்கியதில் இருந்து அவரது ஆட்டம் டாப் கியரில் செல்கிறது என்றால் அது உண்மையே.

- Advertisement -
Published by