இவங்க 2 பேர் ஹெல்ப் இல்லாம விராட் கோலியால் கோப்பையை கைப்பற்ற முடியாது – ஜான்டி ரோட்ஸ் ஓபன்டாக்

Rhodes
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்து தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த உலக கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கெதிராக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்கள்து கருத்துக்களை அளித்து வருகின்றனர்.

IND

- Advertisement -

அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் இந்த தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் எனில் அதில் இரு முக்கிய வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்ற தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நாம் அனைவரும் விராட் கோலி ரன் குவிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் விராட் கோலியும் ஒரு மனிதர்தான். அவர் ரன் அடிக்கும் மிஷின் கிடையாது. நிச்சயம் அவரால் முடிந்த வரை தனது பேட்டிங்கின் மூலம் அழுத்தத்தை தந்து ரன்களை சேகரிப்பார்.

மேலும் எதிரணிகளுக்கு எதிராக ரன்கள் குவிப்பதை தான் அவர் தனது வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் மீது இவ்வளவு எதிர்பார்ப்பு உள்ளதோ அதே போன்று அவரும் ரன் குவித்து வருகிறார். இந்நிலையில் நிச்சயம் இந்திய அணி விராட் கோலியின் தலைமையில் உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் எனில் அவரை தவிர்த்து மற்ற அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆகவேண்டும்.

Rohith

அந்த வகையில் இந்த உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்ற வேண்டும் எனில் பேட்டிங்கில் ரோகித் சர்மா நிச்சயம் கீ பிளேயராக இருப்பார். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் தனது அசாத்தியமான அதிரடியை வெளிப்படுத்தக் கூடியவர். அதுமட்டுமின்றி களத்தில் அவர் நிலைத்து நின்று விட்டால் பெரிய ரன் குவிப்புக்கு அணியை கொண்டு செல்வார். அதனால் ரோகித் சர்மாவின் ஆட்டம் முக்கியம்

அதேபோன்று பவுலிங்கில் போட்டியை எந்த நேரத்திலும் திசை திருப்பக் கூடிய இந்திய அணியின் முக்கிய வீரரான பும்ரா சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணிக்கு மேலும் பலம் அதிகரிக்கும். பவர் பிளேவில் இரண்டு ஓவர்களும், டெத் ஓவர்களில் இரண்டு ஓவர்களும் அவர் வீசும் போது நிச்சயம் எதிரணிகள் ரன் குவிக்க தடுமாறும். இப்படி ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement