இந்திய அணியை 5-0 என்ற கணக்கில் நாங்க வீழ்த்தி அடுத்த தொடருக்கு தயாராக போறோம் – ஜோ ரூட் வெறித்தனம்

Root
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஆண்டு தோறும் நடைபெறும் தொடரான, சிறப்பு வாய்ந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்த இரண்டு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஒரு நாள் உலக கோப்பை தொடருக்கு இணையாக கருதிவருகின்றனர். இந்த ஆண்டிற்கான ஆஷஸ் தொடர், டிசம்பர் மாதம் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட்,

Eng-vs-Aus

- Advertisement -

இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டிகள் அனைத்தையும் வெற்றி பெற்று ஆஷஸ் தொடருக்கு எங்களை தாயார்படுத்திக் கொள்வோம் என்று கூறியுள்ளார். இது குறித்து அந்நாட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கோடைக்காலம் முழுவதும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான பேச்சு வார்த்தைகளே அதிகமாக நடக்கப்போகிறது. ஒரு இங்கிலாந்து பிரஜையாகவும் மற்றும் இங்கிலாந்து அணியின் கேட்னாகவும் அந்த தொடரை கைப்பற்றுவதில் எனக்கு பேரரார்வம் இருக்கிறது.

ஆஷஸ் தொடருக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால் அதற்கான திட்டமிடல் இப்போதிலிருந்தே தொடங்கப்படும். ஆனால் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அந்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதே ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்கான சிறந்த முறையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

ஏனெனில் வலுவான இந்திய அணியை வீழ்த்தினால் அது நமக்கு மனரீதியான தன்னம்பிக்கையை்கொடுக்கும் என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியானது வருகிற 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

Eng-bess

இந்த இறுதிப் போட்டி முடிந்ததும் இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி தொடங்கப்படவிருக்கறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.

Advertisement