அஷ்வின் வந்தா என்ன ? நாங்க பண்ண போறதெல்லாம் இதுமட்டும் தான் – ஜோ ரூட் அதிரடி

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி நாளை ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாளை துவங்கும் 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்கிற காரணத்தினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

indvseng

இந்நிலையில் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீச்சிலூன் சரி, பேட்டிங்கிலும் சரி அஸ்வின் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அஷ்வினுக்கு எதிராக வைத்துள்ள திட்டம் குறித்து பேசுகையில் : அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வளவு பெரிய வீரர் என்பது எங்களுக்கு தெரியும். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர்.

Ashwin

எங்களுக்கு எதிராக அவர் விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி ரன்களையும் எடுத்துள்ளார். அவரது திறமையை நாங்கள் முழுமையாக அறிந்துள்ளோம். எனவே அதற்கேற்ப தற்போது அவருக்கு எதிராக விளையாட தயாராக உள்ளோம். அஷ்வின் சிறப்பான பவுலர் தான் ஆனால் அவரை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

Ashwin

போட்டியின் போது எந்த பவுலர் பந்து வீசினாலும் சரி அவர்களுக்கு எதிராக ரன் குவிப்பது மட்டும் தான் எங்களது வேலை, அதை நாங்கள் சரியாக செய்வோம். பந்தை மட்டுமே பார்ப்போமே தவிர நாங்கள் பந்துவீசும் பவுலரின் வரலாறுகளை பார்க்க மாட்டோம். எங்களது திட்டம் ரன் குவிப்பது மட்டும் தான் அதனை சரியாக பயன்படுத்துவோம் என ஜோ ரூட் அதிரடியாக பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement