நான் இந்திய அணியில் அறிமுகம் ஆன போது என்மீது தோனி நம்பிக்கை வைக்கவில்லை – பும்ரா ஓபன் டாக்

Bumrah
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தனது துல்லியமான யாக்கர்களின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்பவர் ஜஸ்பிரித் பும்ரா . இவர் 2016 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் அறிமுகமான இவர் இதுவரை இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகள், 64 ஒருநாள் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கிட்டத்தட்ட 215 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Bumrah

- Advertisement -

இந்நிலையில் தான் அறிமுகமான முதல் போட்டி குறித்தும் அந்த போட்டியில் கேப்டனாக இருந்த தோனி குறித்தும் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அது குறித்து அவர் கூறிய தகவலில் குறிப்பிட்டதாவது : நான் ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து தோனியின் தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானேன்.

புதுமுக வீரர் என்பதால் எனக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் ஒரு கேப்டனாக தோனி என்னிடம் நிறையப் பேசினார். எனக்கு பந்துவீச்சு குறித்து நிறைய ஆலோசனைகளை வழங்கி கொண்டே இருந்தார். அதற்குமுன் தோனி என்னுடைய பந்துவீச்சைப் பார்த்ததில்லை இந்த விடயம் நிறைய பேருக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனாலும் அதுதான் உண்மை. தோனி என்னை கவனித்ததில்லை.

bumrah 1

நான் அறிமுகமான போட்டியில் டெத் ஓவர்களை வீச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தோனியிடம் சென்று நான் யார்க்கர் வீசட்டுமா என்று கேட்டேன். அதெல்லாம் வேண்டாம் என்று அவர் கூறிவிட்டார். என்னால் யார்க்கர் பந்தை துல்லியமாக வீசமுடியாது என்று அவர் நினைத்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

ஆனால் நான் அந்த ஓவரில் யார்க்கர் பந்துகளை சரியாக வீசி வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தேன் என்று பும்ரா கூறினார். மேலும் அந்த போட்டியில் 40 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் பும்ரா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Bumrah-2

போட்டி முடிந்த பிறகு தோனி என்னிடம் வந்தார். டெத் ஓவர்களில் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால்தான் யார்க்கர் முயற்சித்தேன் என்று அவரிடம் கூறினேன். நீ மட்டும் ஆரம்பத்திலிருந்து இந்தத்தொடரில் பங்கேற்றிருந்தால் நாம் நிச்சயம் தொடரைக் கைப்பற்றியிருப்போம் அந்த அளவிற்கு உன்னுடைய பந்துவீச அற்புதமாக உள்ளது என்று என்னிடம் கூறினார்” என ஜஸ்பிரித் பும்ரா கூறினார்.

Advertisement