காலில் ரத்தம் வந்தும் தொடர்ந்து பந்துவீசிய இங்கிலாந்து வீரர் – நெகிழ்வைத்த சம்பவம்

Anderson-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதி வருகின்றன. டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

Kohli

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி சார்பாக க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ராபின்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் இந்த போட்டியின்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 42வது ஓவரை வீசிக் கொண்டிருந்த போது அவரின் முழங்காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது கேமராவில் பதிவானது. மேலும் அவர் ரத்த காயத்துடன் பந்து வீச்சை தொடர்ந்தார். அதனை அனைத்து கேமராக்களும் தெளிவாக படம் பிடித்தன. அனுபவ வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த தொடர் முழுவதுமே இந்திய அணிக்கு எதிராக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

anderson 2

ரத்தம் வந்ததும் அவர் நிச்சயம் மைதானத்தை விட்டு வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தனது காயத்தை பொருட்படுத்தாமல் ஆண்டர்சன் தொடர்ச்சியாக பந்துவீச போகிறேன் என்று அந்த ஓவர் முழுவதையும் வீசி முடித்தார். அவரின் இந்த செயல் இணையத்தில் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் வைரல் ஆகி வருகின்றன.

மேலும் ஆண்டர்சனின் இந்த அர்ப்பணிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. முதல் இன்னிங்சில் 14 ஓவர்கள் வீசிய அவர் மூன்று மெய்டன் வீசி 41 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement