உலகக்கோப்பை தொடர் எனக்கு ஒரு பாடம் தான். நான் உலகக்கோப்பையில் இதனை செய்ய தவறிவிட்டேன் – கேதார் ஜாதவ்

Jadhav
- Advertisement -

டி என் பி எல் கிரிக்கெட் தொடரின் நான்காவது சீசன் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கில்லிஸ் அணியும் மோதின.

Kedar-Jadhav (1)

- Advertisement -

இந்த போட்டியின் துவக்க விழாவை முன்னிட்டு இந்திய அணியின் கேதார் ஜாதவ் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார். அப்போது அவர் பேட்டி ஒன்றினை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :

இதுபோன்ற தொடர்கள் வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து ஐபிஎல், ரஞ்சி போன்ற போட்டிகளில் அவர்கள் இடம்பெற இதுபோன்ற தொடர்கள் மிகவும் இது உதவியாக இருக்கும். இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்தியா முழுவதும் கவனிக்கப்படுவார்கள் என்றார்.

Kedar-Jadhav

மேலும் சமீப காலமாக இந்தியாவில் நிறைய மைதானங்கள் வளர்ந்து வருகிறது. நடந்த உலக கோப்பை தொடர்களில் நான் சரியாக விளையாடவில்லை. இருப்பினும் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தருகிறது. உலக கோப்பை தொடரில் இருந்து நான் நிறைய விடயங்களை கற்று கொண்டேன் இனிவரும் தொடர்களில் அதனை மாற்றி சிறப்பாக விளையாட கற்றுக் கொள்வேன் என்று ஜாதவ் கூறினார்.

Advertisement