இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது வரை ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பல முன்னாள் வீரர்களும் டோனியை இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
Happy #NationalSportsDay to all of you. Remembering Dhyanchand Ji, the wizard of hockey… #nationalsportsday ???? ???? ⚽️ ????????♂️ ???? ????♂️ @msdhoni pic.twitter.com/67z3UCobRI
— IamKedar (@JadhavKedar) August 29, 2019
ஆனால் தோனி தனது எதிர்காலம் குறித்து மௌனமாகவே இருக்கிறார். இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் தோனி தெரிவிக்கவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு தோனி ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார்.
இந்நிலையில் தோனி தற்போது இந்திய அணியின் வீரரான கேதர் ஜாதவ் உடன் அமெரிக்கா சென்றிருப்பதாகவும், அமெரிக்காவில் உள்ள ஒரு கிளப்பில் கோல்ப் விளையாடியுள்ளார். இதனை புகைப்படமாக எடுத்து கேதார் ஜாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது .இந்த பதிவு தற்போது தோனி ரசிகர்கள் இடையே வைரலாக பகிரப்பட்டு வருகிறது.